சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.
அம்மா உணவகத்தில் தினமும் காலை ஆயிரத்து 200 இட்லி, மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் விலையில்லாமல் ஆதரவற்றோர், சாலையோரங்களில் தனித்து வசிப்போர், மாற்று திறனாளிகள், முகவரியற்றவர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை வழங்கப்படுகிறது.
இத்தகைய பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் தலா 25 கிலோ எடையுள்ள 75 அரிசி மூட்டைகள், தலா 15 லி. கொண்ட 10 டின் எண்ணை டின்கள், தலா 25 கிலோ எடையுள்ள 6 மூட்டை பருப்பு வகைகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் வழங்கினர்.
" alt="" aria-hidden="true" />